கலைமொழி -முத்து 46: மேல் நிலை
இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும். இம்முறை சற்று அதிக சவால் கொடுத்திருக்கிறேன்(!). விடை கண்டு பிடிக்க, இரண்டு படிகள் இருக்கின்றன. 1. எப்பொழுதும் போல் சொற்களைக் கண்டு பிடித்து, முடித்து விட்டேன் என்ற இடத்தில் தட்டினால், விடைப் பெட்டியில் முதற்படி விடை கிடைக்கும். 2. இப்பொழுது, இந்தச் சொற்களை மீண்டும் ஒழுங்கு படுத்தி பொருளுள்ள வாக்கியமாக்க வேண்டும். உதாரணமாக, முதற்படியில் “முதல ஆதி அகர பகவன் எழுத்தெல்லாம்” என்று வரலாம். இதை ”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்” என்று மாற்றி இறுதி விடைகண்டு பிடிக்க வேண்டும். ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து, மீண்டும் ஒரு முறை சொற்களை ஒழுங்கு செய்து, இறுதி விடையைப் பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும். ஓர் உபாயம்! ஒர